Posts

அன்பே சிவம்

எண்ணங்கள் தன் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பித்து விட்டன. 1968-1969  இந்த இரண்டு ஆண்டுகளிலும்தான்  எத்தனை எத்தனை முயற்சிகள் , எத்தனை எத்தனை சாதனைகள் . நினைத்தாலே இனிக்கும் ஆண்டுகள் இவை. நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். அப்பொழுது சீக்கிய குரு திரு குரு நானக் அவர்களின் 500 ஆவது பிறந்த நாள் வைபவம் வந்தது. எங்கள் தமிழ் ஆசிரியை , அதை ஒட்டி சென்னையில் இருக்கும் அனைத்து உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்காக  நடக்கப் போகும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிக்கு மாணவிகளின் பெயர்களைக் கேட்டு எழுதிக் கொண்டார்கள்.  நான் பேச்சுப் போட்டிக்குப் பெயர் கொடுத்தேன்  மாணவிகள் அந்த முயற்சியில் மிகவும் ஆவலுடன் ஈடுபட்டிருந்தோம். இரண்டு தோழிகள் கட்டுரைப் போட்டிக்காக நிறைய   குறிப்பு எடுத்து மிக அழகிய தமிழில் கட்டுரை எழுதி இருந்தார்கள்.   ஆனால் எதோ தவிர்க்க முடியாத காரணத்தால் அவர்களால் போட்டியில் பங்கு பெற முடியவில்லை. இருவரும் எனக்குத் தங்கள் கட்டுரைக்கான குறிப்புக்களைக் கொடுத்து பேச்சுப் போட்டிக்குத் திறம்படத் தயார் ஆகும்படி சொன்னார்கள். கொட்டும் மழை. ஊரெங்கும் பெய்த மழையில் எங்கும் முழங்கால் அ

வெண்ணிலவைத் தொட்டு

Image
நிலவினைக் காட்டிக் காட்டிக் கதை சொல்லி , நித்தமும் நமக்கு   அமுது ஊட்டி வளர்த்தவர் அன்னை என்றால் , நம் அறிவுப் பசிக்கு அமுது ஊட்டியவர்கள் நம் ஆசிரியர்கள் தானே!   பள்ளிக்கூடத்தில் நம் ஆசிரியர்கள் நம்மை ஊக்குவித்தது போல் யாருமே செய்திருக்க முடியாது என்பது திண்ணம். சென்னையில் நான் படித்த பள்ளி ஆசிரியை திருமதி ராஜாமணி அவர்கள் ஒருநாள் காலை வகுப்பிற்கு வந்தனர் . முப்பத்து ஐந்து மாணவிகள் இருந்த வகுப்பு. வருடம் 1969 .  ராஜாமணி டீச்சர் காலையில் ஆங்கில வகுப்பு எடுப்பார்கள். வந்தவுடனே , " எனது அருமை மாணவிகளே , அமெரிக்கா சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது. நீங்கள் எல்லோரும் நாசாவுக்கு கடிதம் எழுதி  நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் கையொப்பம் பெற்ற போட்டோ கேட்டு எழுதுங்கள் ,” என்று கூறினார். சின்னஞ் சிறு வயது முதலே படிப்பைத் தவிர மற்ற கலைகள் , என்னை மிகவும் ஈர்த்துள்ளன. கேட்கவும் வேண்டுமா ?   அன்று மாலை வீடு   வந்தவுடன் , பெற்றவர்களிடம் எப்படியோ மன்றாடி ஒரு அந்நிய நாட்டு அஞ்சல் கவர் வாங்கி  எனது பெரிய அண்ணாவின் உதவியுடன் ஆங்கிலத்தில் கடிதம் எழுதி தபால் பெட்டியில் சேர்த்தும் ஆயிற